Monday 14 February 2011

அனுபவம் தந்த முதிர்ச்சி

  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன் என்பதற்கு சாட்சி மேலே உள்ள வார்த்தைகள். நல்லவை, கெட்டவை என வேறுபடுத்திப் பார்க்க இயலாத வகையில் எத்தனையோ நிகழ்வுகள். இன்று நல்லவை என்பது நாளை கெட்டவையாக மாறலாம். இதுவே மாறியும் நடக்கலாம். காலம் என்கிற சூழ்நிலையில் அகப்பட்டுக்கொண்ட அற்ப மனிதர்கள் நாம். ஒரு நிகழ்வின் முடிவு நல்லதா, கெட்டதா என்பதை விட, அதை ஆராய்ந்து சூழ்நிலைக்கு ஏற்ப அதை நுகருதலே அனுபவத்தின் சிறப்பு.    வானம் போல இருக்க வேண்டும் என்ற எனது ஆசிரியர் கூற்றைப் போல அனைத்தையும் உள்வாங்கும் வானமாக மாறும் முயற்சியில்....

1 comment: