Monday 14 February 2011

தம்பி

எத்தனையோ முறை நான் செவிமடுத்த இந்த வார்த்தை சமீபகாலமாக எனக்கு ஒரு புதிய கோணத்தில் தென்படுகிறது. அரசியல் தலைவர்கள் முதல் அருகாமையில் வசிப்போர் வரை அனைவரிடமும் கேட்ட வார்த்தைதான். ஆனால் அன்று எங்கள் உரையாடலில் இந்த வார்த்தை ஒரு புதிய பரிணாமத்தைப் பெற்றது என் மனதில். என் நண்பன் ஒவ்வொரு முறை அந்த சொல்லை உச்சரிக்கும் போதும் என் மனதில் ஓர் இனம் புரியாத உணர்வு. யார் அந்த தம்பி? வீரன் வேலுத்தம்பியா? தற்காலத் தம்பியா? யாராயினும் "தம்பி உடையான் படைக்கு அஞ்சான்". ஆனால் இங்கு தமிழே, தமிழினமே அல்லவா அண்ணனாக இருக்கிறது ??????????

1 comment: